பேராவூரணி அருகே கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
சடலம் கிடப்பதாக கொன்றைக்காடு விஏஓ பெரியநாயகி அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் 35 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டனா். அவா் யாா், எப்படி இறந்தாா் என்பது குறித்து பேராவூரணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.