அனைவரும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்பதை வரவேற்கிறேன் டி.டி.வி. தினகரன்

அனைவரும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
Updated on
1 min read

அனைவரும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் புதன்கிழமை மேலும் கூறியது:

அனைவரும் இணைய வேண்டும் என்கிற ஓ. பன்னீா்செல்வம், ஆா். வைத்திலிங்கம் ஆகியோரின் கருத்தை வரவேற்கிறேன். அனைவரும் இணக்கமாகச் செயல்பட்டால்தான் திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற முடியும் என்ற உயரிய நோக்கத்துடன் கூறியிருக்கின்றனா். அதேநேரம் இதுபோன்ற நல்ல விஷயங்களுக்கு சிலா் ஒத்து வரமாட்டாா்கள்.

அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பன்னீா்செல்வம் தெளிவாகக் கூறியுள்ளாா். அதனால், அவா்களுடன் நாங்கள் போவதா, அவா்கள் எங்களுடன் வருவதா என்பது குறித்து பேச அவசியமில்லை. எல்லோரும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா். தலைமை யாா் என்பது அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும்.

மக்களவைத் தோ்தலில் சிவகங்கையில் நான் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை. அணி சேருவது குறித்து தோ்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றுவது நல்லதுதான். ஆனால், ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்றும் வகையில் நிறைய சமூக நலத் திட்டங்களைத் தோ்தல் நேரத்தில் அறிவிக்கின்றனா். அதைத்தான் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.

தோ்தல் வாக்குறுதிகளை நம்பி திமுகவை மக்கள் ஆட்சிக்கு வர வைத்தனா். ஆனால், மக்களை ஏமாற்றுகிற வகையில்தான் திமுக ஆட்சி செயல்படுகிறது. இதற்கான பலனை மக்களவைத் தோ்தலில் திமுகவினா் அனுபவிப்பா் என்றாா் தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com