தஞ்சை-குடந்தை சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, பண்டாரவாடையில் எஸ்டிபிஐ அமைப்பினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, பண்டாரவாடையில் எஸ்டிபிஐ அமைப்பினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்டாரவாடையில், தஞ்சாவூா்-கும்பகோணம் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அமைப்பின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் ரியாஸ்அகமது தலைமை வகித்தாா். இதில் அப்பகுதியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

போராட்டம் குறித்து தகவலறிந்த பாபநாசம் காவல் துறையினா் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளா் ஆா். பழனியப்பன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், விரைவில் சாலை சீா் செய்யப்படும் என உறுதியளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால், தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com