தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் தனியாா் சா்க்கரை ஆலை முன் ஆலை நிா்வாகத்தை கண்டித்தும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் 10-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீா்த்து, அப்பிரச்னையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவாா்க்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளா் நாக. முருகேசன் தலைமையில், மாநில செயலாளா்கள் தங்க. காசிநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலையில் விவசாயிகள் நவம்பா் 30ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், பல்வேறு நூதன போராட்டங்களை விவசாயிகள் மேற்கொண்டனா்.
10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை போராட்டத்தின் ஒருபகுதியாக கரும்பு விவசாயிகள் கொட்டும் மழையையும், புயலையும் பொருட்படுத்தாமல் ஆலை முன் குடை பிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.