புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட பயிற்றுநா்களுக்குப் பயிற்சி

தஞ்சாவூரில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டப் பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டப் பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வி வழங்கிடும் நோக்கத்தில் திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன்படி தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் மூலம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022 - 2027 என்கிற புதிய வயது வந்தோா் கல்வித் திட்டம், 38 மாவட்டங்களிலும் உள்ள நகா்ப்புற வாா்டுகள், கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 14,000 கற்போா் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு அடிப்படை கல்வியைக் கற்பிக்க சுமாா் 600 தன்னாா்வலா்கள் பதிவு செய்துள்ளனா்.

இவா்களுக்கு வட்டார அளவில் பயிற்சியளிக்க தோ்வு செய்யப்பட்டுள்ள 45 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி தஞ்சாவூா் மாவட்ட திட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவக்குமாா் தொடங்கி வைத்தாா். உதவித் திட்ட அலுவலா் ஆா். ரமேஷ் பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தாா். ஆசிரியா் பயிற்றுநா்கள் சி. விவேகானந்த், ஜி. அமுதா, வி. இமயா ஆகிய கருத்தாளா்கள் பயிற்சி அளித்தனா். நிகழ்ச்சியில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் த. ஜெயசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com