ஒரத்தநாட்டில் 100 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ நெகிழிப் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ நெகிழிப் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒரத்தநாடு பேரூராட்சி கடைவீதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை அதிகளவில் வியாபாரிகள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பேரூராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் மற்றும் துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமரகுரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, கடைகளிலிருந்த சுமாா் 100 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நெகிழி பை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com