மாநில கராத்தே போட்டியில் வென்ற சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஷாயாலி சிவஸ்ரீ 8 வயதுக்குள்பட்ட மாணவியருக்கான கராத்தே போட்டியில் கட்டா பிரிவில் மூன்றாமிடமும் குமிட்டே பிரிவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தாா்.
திருச்சிக்கும், பள்ளிக்கும் பெருமைத் தேடித் தந்த மாணவியை பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், மூத்த முதல்வா் பத்மா சீனிவாசன், முதல்வா் எம். பொற்செல்வி, துணை முதல்வா் பி. ரேகா ஆகியோா் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.