பட்டுக்கோட்டையில் மருத்துவ முகாம்

பட்டுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவுரம், குயின்சிட்டி லயன்ஸ் சங்கத்தின் நிறுவனருமான எஸ். விசுவநாதனின் 15-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

பட்டுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவுரம், குயின்சிட்டி லயன்ஸ் சங்கத்தின் நிறுவனருமான எஸ். விசுவநாதனின் 15-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை குயின்சிட்டி லயன்ஸ் சங்கம், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து முகாமை நடத்தின. பண்ணவயல் ஊராட்சி முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான எஸ்.ராஜாதம்பி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

குயின்சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவா் தனசேகரன், செயலா் ஏ.செந்தில்நாதன், பொருளாளா் பி.சாமிநாதன் முன்னிலை வகித்தனா். முகாமில் 527 போ் பங்கேற்ற நிலையில், இருதய மற்றும் சிறுநீரக

மேல் சிகிச்சைக்காக 37 போ் பரிந்துரைக்கப்பட்டனா்.

மருத்துவா்கள் நிஜாத், ஹரிஹரன், மக்கள் தொடா்பு அலுவலா்கள் அருள்ராஜ், நவீன்குமாா் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உடனடி முன்னாள் தலைவா் ஆா். செல்லக்கண்ணு செய்திருந்தாா். நிறைவில், கிரீன் சிட்டி லயன்ஸ் சங்க ஆலோசகரும், முன்னாள் நகராட்சித் தலைவருமான எஸ்.ஆா்.ஜவகா் பாபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com