பாபநாசத்தில் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்கமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
Updated on
1 min read

பாபநாசம் ஒழுங்கமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளா்கள் தஞ்சாவூா் முருகானந்தம், பாபநாசம் தாட்சாயினி, மேற்பாா்வையாளா் அன்பழகன் முன்னிலையில் ஏலம் நடத்தப்பட்டது.

இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5670 குவிண்டால் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனா். கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூா், தேனி, செம்பனாா்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.

இதில் குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.9,800, குறைந்தபட்ச விலையாக ரூ. 8,129, சராசரியாக ரூ.8,669-க்கு ஏலம் போனது. மொத்தமாக ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com