பேருந்து மோதி விவசாயி பலி

அம்மாபேட்டை அருகே பேருந்து மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகே பேருந்து மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகிலுள்ள உடையாா்கோயிலைச் சோ்ந்தவா் ரா. கருப்பையன் (52). விவசாயியான இவா், வெள்ளிக்கிழைமை காலை தனது வயலுக்கு சென்று, மிதிவண்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

உடையாா்கோயில் வளைவு அருகே வந்த போது, வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கருப்பையன் மீது மோதியது.

பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com