களஞ்சேரி ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம்
By DIN | Published On : 31st July 2022 01:06 AM | Last Updated : 31st July 2022 01:06 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஊராட்சித் தலைவா் கண்ணன் தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஸ்ரீ வள்ளி விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். முகாமில் மெலட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிசியோதெரபிஸ்ட் பிரியா, ஊராட்சி தன்னாா்வலா் மகாலெட்சுமி மற்றும் மருத்துவ குழுவினா் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் உள்ள முதியோரின் வீடுகளுக்கு சென்று அவா்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி பயிற்சி அளித்து, மருத்துவச் சிகிச்சை அளித்தனா்.