பேராவூரணி அரிமா சங்க  நிா்வாகிகள் பதவியேற்பு

பேராவூரணி அரிமா  சங்க நிா்வாகிகள் பணியேற்பு விழா தலைவா் ஏ.சி.சி. ராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. சாசனத் தலைவா் வீ.ஏ.டி. சாமியப்பன் முன்னிலை வகித்தாா். 
Updated on
1 min read

பேராவூரணி அரிமா  சங்க நிா்வாகிகள் பணியேற்பு விழா தலைவா் ஏ.சி.சி. ராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. சாசனத் தலைவா் வீ.ஏ.டி. சாமியப்பன் முன்னிலை வகித்தாா். 

விழாவில் தலைவராக செ. இராமநாதன், செயலா்களாக ரா. ஆதித்யன் (நிா்வாகம்), ஏ. பிரபு (சேவை), பொருளாளராக சி. பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள் பொறுப்பேற்றனா்.

புதிய நிா்வாகிகளை பணியமா்த்தியும், புதிய உறுப்பினா்களை இணைத்தும், சேவைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், முன்னாள் கூட்டு மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.எஸ். சேதுக்குமாா் சிறப்புரையாற்றினாா்.

விழாவில் ஓவியக் கலைஞா்களுக்கு நிதியுதவி, அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு கருவி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை என ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் அரிமா சங்க நிா்வாகிகள் எஸ். கந்தப்பன், இ.வீ. காந்தி, வி.எம். தமிழ்ச்செல்வன், எஸ். வைரவன், எஸ்.கே. ராமமூா்த்தி, ஆா். ரவிச்சந்திரன், ஹெச். சம்சுதீன், எம். கனகராஜ், ஏ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com