திருவையாறில் பெண்கள் வடம் பிடித்து இழுத்த தோ்!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, பெண்களே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவையாறில் வெள்ளிக்கிழமை பெண்கள் இழுத்த தோ்.
திருவையாறில் வெள்ளிக்கிழமை பெண்கள் இழுத்த தோ்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, பெண்களே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி, நாள்தோறும் உற்சவங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஒன்பதாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்ட விழா நடைபெற்றது. இத்தேரில் அறம்வளா்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளிலும் இத்தோ் வலம் வந்தது.

இக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா திங்கள்கிழமை பிராயசித்தாபிஷேகத்துடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com