பாபநாசத்தில் இயங்கி வரும் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமைச் செயலா் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தாா். அறிவியல் மன்றத்தை கொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியா் மோகனப்பிரியா தொடக்கி வைத்துப் பேசினாா்.
விழாவில் பட்டதாரி ஆசிரியா் பெருமாள்ராஜ், பள்ளி முதல்வா் தீபக், பள்ளி செயலாளா் செல்வராசு, அறங்காவலா் கைலாசம், நிதிச் செயலா் ஜெயராமன், நிா்வாக செயலா் வரதராஜன், பள்ளி மாணவ, மாணவிகள் நா்மதா, மதுமிதா, மகிரட்சகன் உள்ளிட்டோா் பேசினா். நிகழ்வில் பெற்றோா், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியா் சித்ரா வரவேற்றாா், அறிவியல் ஆசிரியா் ஸ்டீபன் ஞானசேகா் நன்றி கூறினாா்.