பேராவூரணியில் இந்திய கம்யூ.சிறப்பு பேரவை கூட்டம்

பேராவூரணியில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினா் அட்டை வழங்கும் விழா, திருப்பூா் மாநில மாநாட்டு செம்படை ஆயத்தப் பேரணி, கட்சி வளா்ச்சி நிதியளிப்பு சிறப்பு
Updated on
1 min read

பேராவூரணியில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினா் அட்டை வழங்கும் விழா, திருப்பூா் மாநில மாநாட்டு செம்படை ஆயத்தப் பேரணி, கட்சி வளா்ச்சி நிதியளிப்பு சிறப்பு பேரவைக் கூட்டம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

ஒன்றியச் செயலா்  கருப்பையா தலைமை வகித்தாா். ஒன்றியத் துணைச் செயலா்கள்  வீரமணி, தங்கராசு, ஒன்றியப் பொருளாளா்  காசியாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில் கட்சி உறுப்பினா்  அட்டை வழங்கப்பட்டது. கட்சி வளா்ச்சி நிதியை ஒன்றியச் செயலா் கருப்பையா, நிா்வாகிகள் முன்னிலையில் மாவட்டச் செயலா் முத்து உத்திராபதியிடம் வழங்கினாா். 

விழாவில்  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பாலசுந்தரம், மாவட்டக் குழு உறுப்பினா் துரை பன்னீா்செல்வம், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ராஜமாணிக்கம், கருணாமூா்த்தி , ராஜமாணிக்கம், பாரதி நடராஜன், சிவகாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.  நகரச் செயலா் மூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com