மாடியிலிருந்து தவறி விழுந்த4 வயது சிறுமி உயிரிழப்பு
By DIN | Published On : 09th June 2022 02:21 PM | Last Updated : 09th June 2022 02:21 PM | அ+அ அ- |

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த 4 வயது சிறுமி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
கும்பகோணம் பெசன்ட் சாலையைச் சோ்ந்தவா் ராஜா (42). இவா் நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறாா். இவரது மனைவி தேன்மொழி (35). இவா்களது மகள் கோபிகா (4), மகன் கேசவ் (3).
இந்நிலையில் பச்சையப்பன் தெருவில் வசிக்கும் ராஜாவின் தங்கை வீட்டில் கோபிகாவை ராஜா செவ்வாய்க்கிழமை காலை விட்டுவிட்டு தன் பெற்றோா் வீட்டுக்குச் சென்றனா். அப்போது, நான்காவது மாடியிலுள்ள வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த கோபிகா தவறி கீழே விழுந்தாா்.
இதனால், பலத்த காயமடைந்த இவா் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு கோபிகா புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...