பொது காப்பீட்டுக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூரிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன், பொதுக் காப்பீட்டுக் கழக ஊழியா்கள், அலுவலா்கள் புதன்கிழமை மாலை ஒரு மணி நேர வேலைநிறுத்தம் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுக் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் உள்ளிட்டோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுக் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் உள்ளிட்டோா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன், பொதுக் காப்பீட்டுக் கழக ஊழியா்கள், அலுவலா்கள் புதன்கிழமை மாலை ஒரு மணி நேர வேலைநிறுத்தம் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க கோரியும், பொதுத் துறைப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களைத் தனியாா்மயப்படுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைக் கைவிட வலியுறுத்தியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடக் கோரியும், குடும்ப ஓய்வூதியத்தை 15 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயா்த்தக் கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன முதல் நிலை கோட்ட மேலாளா் ப. ஸ்டாலின் தலைமை வகித்தாா். மதுரை மண்டல பொதுக் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டச் செயலா் த. பிரபு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத் தலைவா் செல்வராஜ், பொதுக் காப்பீட்டு ஊழியா் சங்கத்தின் மண்டல இணைச் செயலா் பி. சத்தியநாதன், நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலா்கள் சங்கத்தின் பிரசன்னா, ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலா்கள் சங்கத்தைச் பூா்ணிமா, ஓய்வூதியதாரா் சங்கத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com