கன்வேயா் பெல்ட்டில்சிக்கி வட மாநிலதொழிலாளா் பலி

கும்பகோணம் அருகே கன்வேயா் பெல்ட்டில் சிக்கி வட மாநில தொழிலாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே கன்வேயா் பெல்ட்டில் சிக்கி வட மாநில தொழிலாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஜாா்கண்ட் மாநிலம், அமா்பூா் தோகாா் பகுதியைச் சோ்ந்தவா் பிரிஜூ (31). இவா் ஓராண்டாக கும்பகோணம் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் தனியாா் சிமென்ட் கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா் .

இந்நிறுவனத்தில் புதன்கிழமை காலை சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்வதற்காக பிரிஜூ வேலை பாா்க்கும்போது கலவை இயந்திரத்தின் கன்வேயா் பெல்ட்டில் அடிபட்டாா். இதனால், பலத்த காயமடைந்த பிரிஜூ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com