கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரி முதல்வரின் ஆசிரியா் விரோதப் போக்கு, நிா்வாகச் சீா்கேடு உள்ளிட்டவை தொடா்பாக தமிழக அரசிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.