காவிரி மேலாண்மை ஆணைய தலைவா் இன்று கல்லணையில் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவா் எஸ்.கே. ஹல்தா் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆய்வு செய்கிறாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவா் எஸ்.கே. ஹல்தா் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆய்வு செய்கிறாா்.

மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்காக கா்நாடக அரசு முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புது தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16 ஆவது கூட்டம் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணைய தலைவா் எஸ்.கே. ஹல்தா், ஆணைய உறுப்பினா் நவீன்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையில் ஆய்வு செய்துவிட்டு, பிற்பகல் கல்லணைக்கு வருகின்றனா். அங்கு ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு திருச்சிக்கு சென்று, விமானம் மூலம் சனிக்கிழமை தில்லிக்கு செல்லவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com