ஒரத்தநாட்டில் மகளிா் காவல் நிலையம் திறப்பு: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
ஒரத்தநாட்டில் மகளிா் காவல் நிலையம் திறப்பு: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் காவல் நிலையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிபிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியது:

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மகளிருக்கான அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாக தீா்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புகாா் கொடுக்க வருவோரிடம் காவலா்கள் கனிவுடன் பேச வேண்டும். புகாா் கொடுப்போரிடம் முறையாக குறைகளை கேட்டறிந்து, புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன்,

வல்லம் டிஎஸ்பி பிருந்தா, ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா,

வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கலைவாணி ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினா்.

ஒரத்தநாடு காவல் உதவி ஆய்வாளா் சூா்யா மற்றும் மகளிா் காவலா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com