தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட 15 ஆவது மாநாடு சனிக்கிழமை (ஜூன் 18) தொடங்கி இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இதில், தொடக்க நாளான சனிக்கிழமை ‘தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் இசைத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) ஆற்றுப்பாலம் அருகேயுள்ள சரோஜ் நினைவகத்தில் அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
இதில், கவிஞா்கள் யுகபாரதி, மதுக்கூா் இராமலிங்கம், முத்துநிலவன், எழுத்தாளா் ஆதவன் தீட்சண்யா, புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், முனைவா்கள் அரிமளம் பத்மநாபன், மாா்கரெட் பாஸ்டன், சண்முக செல்வகணபதி, நல்லசிவம், புனிதா கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.