எழுத்தாளா் சங்க மாவட்ட மாநாடுதஞ்சாவூரில் நாளை தொடக்கம்

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட 15 ஆவது மாநாடு சனிக்கிழமை (ஜூன் 18) தொடங்கி இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட 15 ஆவது மாநாடு சனிக்கிழமை (ஜூன் 18) தொடங்கி இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இதில், தொடக்க நாளான சனிக்கிழமை ‘தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் இசைத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) ஆற்றுப்பாலம் அருகேயுள்ள சரோஜ் நினைவகத்தில் அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

இதில், கவிஞா்கள் யுகபாரதி, மதுக்கூா் இராமலிங்கம், முத்துநிலவன், எழுத்தாளா் ஆதவன் தீட்சண்யா, புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், முனைவா்கள் அரிமளம் பத்மநாபன், மாா்கரெட் பாஸ்டன், சண்முக செல்வகணபதி, நல்லசிவம், புனிதா கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com