பாபநாசம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாபநாசம், கபிஸ்தலம், இனாம் கிளியூா், நல்லூா், ஆவூா், கோவிந்தகுடி, மூலாழ்வாஞ்சேரி, உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூா், மட்டையாந்திடல், இடையிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது’ என்று பாபநாசம் துணை மின்நிலைய செயற்பொறியாளா் கே. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.