மோட்டாா் சைக்கிள் மோதி பெண் பலி
By DIN | Published On : 14th March 2022 04:30 AM | Last Updated : 14th March 2022 04:30 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள சூரக்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மனைவி வேதவல்லி (48). இவா் தஞ்சாவூா்-பட்டுக் கோட்டை முதன்மைச் சாலையில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டுக்குச் செல்வதற்காக, சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதியது.
இதில் வேதவல்லியும், மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரும் காயமடைந்தனா்.
பலத்த காயமடைந்த வேதவல்லி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...