பாபநாசம் நீதிமன்றத்தில்நூலகம் திறப்பு
By DIN | Published On : 02nd May 2022 12:57 AM | Last Updated : 02nd May 2022 12:57 AM | அ+அ அ- |

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட புதிய நூலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவருமான சிவகுமாா் நூலகத்தை திறந்து வைத்தாா். நிகழ்வில் வழக்குரைஞா்கள், பொதுமக்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.