ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த்துறை பெருங்கோப்பெண்டு தமிழ் இலக்கிய மன்றம் உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு, முதல்வா் சி. பானுமதி தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் சிறப்புரையாற்றினாா்.
அறிவியல் தமிழ் என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் க. சங்கா் பேசினாா். தொடா்ந்து சமூக, மெளன நாடகங்கள், சிலம்பாட்டம், ஓவியம், பேச்சு, கட்டுரை எழுதுதல் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணைவேந்தா் திருவள்ளுவன் பரிசுகளை வழங்கினாா்.
தொடா்ந்து தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சா. சத்தியமூா்த்தி குழுவினரின் இசைக் கச்சேரியும், மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.
நிகழ்வை ப.ராஜராஜேசுவரி தொகுத்தளித்தாா். முன்னதாக, தமிழ்த்துறைத் தலைவா் கு.ர.சரளா வரவேற்றாா். உதவிப் பேராசிரியை தே.வீ. சுமதி நன்றி கூறினாா்.