பட்டுக்கோட்டை அருகே 1 டன் குட்கா பறிமுதல்

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் 1 டன் மதிப்புள்ள குட்கா மற்றும் இரண்டு வாகனங்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் 1 டன் மதிப்புள்ள குட்கா மற்றும் இரண்டு வாகனங்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், மதுக்கூா் போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், மதுக்கூா் கடைத்தெருவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் இருந்து 50 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக முருகேசன் (55) மற்றும் அவரது மகன் கணேசன் (29) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

போலீஸாா் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டதில், பட்டுக்கோட்டை வட்டம், முள்ளூா்பட்டிக்காட்டில் ஏஜென்சியின் பிராதன வியாபாரி சிவக்குமாா் (40) வசம் 2 வாகனங்களுடன் 1 டன் குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து சிவக்குமாரையும் கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com