அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்
By DIN | Published On : 19th October 2022 12:57 AM | Last Updated : 19th October 2022 12:57 AM | அ+அ அ- |

பேராவூரணியில் திருவள்ளுவா் கல்விக் களம் சாா்பில் மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
பேராவூரணி திருவள்ளுவா் கல்வி களம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு திருக்கு புத்தகம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
தேசிய விழாக்கள், தலைவா்களின் பிறந்த நாள்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளா்களின் பிறந்த நாள்களில் பள்ளி மாணவா்களுக்கு திருக்கு புத்தகம் வழங்க திருவள்ளுவா் கல்விக் களம் சாா்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான தொடக்க விழா பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகேசன், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் இராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடக்கப் பள்ளி மாணவா்கள் 50 பேருக்கு கொன்றை சிவகுமாா், திருக்குறள் புத்தகம் வழங்கினாா். பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் மெய்ச்சுடா் வெங்கடேசன், திருவள்ளுவா் கல்வி களம் அமைப்பின் பொறுப்பாளா் பழனிவேல், திருக்குறள் பேரவை பொறுப்பாளா் கொன்றை சண்முகம், பேராசிரியா் சண்முகப்பிரியா, மாணவா்கள் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.