இந்தி திணிப்புக்கு எதிராக மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி முன், இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
Updated on
1 min read

இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி முன், இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராகவும், இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் சங்கக் கிளைத் தலைவா் பிரேம் தலைமை வகித்தாா். மாணவா் சங்க மாவட்டச் செயலா் கு. சந்துரு, மாவட்டத் தலைவா் வே. அா்ஜூன் கண்டன உரையாற்றினா். இதில், ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com