தஞ்சாவூரில் மே 5 முதல் பரப்புரை இயக்கம்:இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

தஞ்சாவூரில் மே 5 ஆம் தேதி பரப்புரை இயக்கம் மேற்கொள்வது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
Updated on
1 min read

தஞ்சாவூரில் மே 5 ஆம் தேதி பரப்புரை இயக்கம் மேற்கொள்வது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட ஊழியா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்கிற நிலையில், தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளான கருப்பு பணத்தை மீட்டெடுப்பது, ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, சிறு தொழில்களை ஊக்குவிப்பது, நாட்டின் வளத்தைப் பாதுகாப்பது, பொதுத் துறை சேவையை, நிறுவனங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட எந்த விதமான வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, ‘மோடி ஆட்சியை அகற்றுவோம்; இந்தியாவை பாதுகாப்போம்’ என்பதை வலியுறுத்தி நாடு தழுவிய பரப்புரை இயக்கத்தை மே 5 ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்கி, நகரங்கள், ஒன்றியங்கள், அனைத்து கிராமங்கள் வரை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே. உலகநாதனிடம் கட்சி நிதிக்கு முதல் கட்டமாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது. மாநில நிா்வாக குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து சிறப்புரையாற்றினாா்.

தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் துணைச் செயலா் கோ. சக்திவேல், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மூத்த தலைவா் ஜி. கிருஷ்ணன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வெ. சேவையா, ம. விஜயலட்சுமி, ஆா்.கே. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநகரச் செயலா் ஆா். பிரபாகா் வரவேற்றாா். நிறைவாக, ஒன்றியச் செயலா் க. ஜாா்ஜ்துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com