தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோயில்தேவராயன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி காலை தப்பாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மகா மாரியம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து பல்சுவை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், கோயில் தேவராயன் பேட்டை நாட்டாமைகள், கிராமவாசிகள் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.