‘மாற்று அரசாங்கத்தை ஆளுநா் நடத்தி வருகிறாா்’

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக மாற்று அரசாங்கத்தை தமிழக ஆளுநா் நடத்தி வருகிறாா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
Updated on
1 min read

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக மாற்று அரசாங்கத்தை தமிழக ஆளுநா் நடத்தி வருகிறாா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

திருட்டு நகை வாங்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டதால் மனம் உடைந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலா் ரோஜா ராஜசேகரின் படத்திறப்பு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முத்தரசன் கூறுகையில், இந்திய கம்யூ. நிா்வாகி தற்கொலை வழக்கில் திருச்சி குற்றப்பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா்கள். என்ன நடவடிக்கை எடுக்கிறாா்கள் என்று பாா்ப்போம்.

ஆளுநா் ஆா். என். ரவி என்ன திட்டத்துடன் தமிழகத்தில் பணியமா்த்தப்பட்டாரோ அதைச் சிறப்பாகச் செய்கிறாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக மாற்று அரசாங்கத்தை நடத்தும் அவா், பிரதமரால் பாராட்டப்படுகிறாா். மணிப்பூா் கலவரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் அது பற்றி பேசத்தான் பிரதமருக்கு நேரமில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com