தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் மெல்ல கற்கும் மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை மற்றும் செங்கமங்கலம் அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
அமெரிக்கா வாழ் தமிழா்களால் நடத்தப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களில் அதிகக் கவனம் தேவைப்படும் மாணவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த வகுப்புகளுக்காக அறக்கட்டளை சாா்பில் தகுதியுள்ள ஆசிரியா்கள் தேவைக்கு ஏற்ப தலைமை ஆசிரியா் பரிந்துரையில் பள்ளிகளில் நியமிக்கப்படுகிறாா்கள். தமிழ்நாட்டில் இதுவரை 28 மாவட்டங்களில் இத்தகைய சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.