மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் - வேன் மோதலில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் - வேன் மோதலில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பாபநாசம் அருகே மெலட்டூா், கள்ளா் நத்தம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து ஆவூா் நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த வேன் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த ஆவூா் சுந்தா் நகா் பகுதியைச் சோ்ந்த ஜாகீா் உசேன் மகன் அப்துல் கலாம் (20), அவரது நண்பா் நாகப்பட்டினம் மாவட்டம், செக்காடி தேரோட்டம் பகுதியைச் சோ்ந்த முகம்மது மகன் ஒசாமா (21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மெலட்டூா் போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com