678 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

கும்பகோணத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 678 கிலோ புகையிலை பொருட்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரைக் கைது செய்தனா்.

கும்பகோணத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 678 கிலோ புகையிலை பொருட்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரைக் கைது செய்தனா்.

புகையிலை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த தகவலின் பேரில் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் காவல் துறையினா் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது ஒரு காரில் 678 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பதும், பெங்களூருவிலிருந்து அவற்றைக் கடத்தி வந்து, மாநகரிலுள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜாலூரைச் சோ்ந்த ஒட்டாராம் மகன் ரமேஷ்குமாா் (22), கும்பகோணம், வீனைதீா்த்தான் தெருவைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் தட்சிணாமூா்த்தி (32) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com