பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கும்பகோணம்: ஒப்பிலியப்பன் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

News image
கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு விழா
Updated On :29 ஜூன் 2023, 6:08 am

DIN

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

தமிழக திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில் பூலோக வைகுந்தம், திருவிண்ணகர் என போற்றப்படுகிறது. இத்தலம் திருவேங்கடம் என்றும், திருப்பதியைப் போலவே பல்வேறு வகைகளில் பெரியதொரு பிரார்த்தனை தலமாகவும் விளங்கி வருகிறது.

Story image

இக்கோயிலில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சன்னதிகள் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இத்திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழா ஜூன் 25 ஆம் தேதி தொடங்கியது.

இதில், காலையில் புண்யாஹவாசனம், ஸ்ரீசுதர்சன ஹோமம், வேத, திவ்யப்பிரபந்த, ஸ்ரீபாஷ்யாதிக்ரந்த பாராயணம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் முதல் கால யாக பூஜைகள் தொடங்கி, பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.

Story image

தொடர்ந்து, ஜூன் 26 காலை இரண்டாம் கால யாக பூஜைகள், மாலை மூன்றாம் கால யாக பூஜைகள், 27 ஆம் தேதி நான்காம் கால யாக பூஜைகள், மாலை ஐந்தாம் கால யாக பூஜைகள், புதன்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைகள், மாலை ஏழாம் கால யாக பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.

Story image

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை புண்யாஹவாசனம், திருவாராதனம், ஹோமங்கள், யாத்ராதானம், பஞ்ச, தச தானங்கள், கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் விமான மற்றும் மூலவர் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Story image

பின்னர், ஆராதனம், சாற்றுமுறை, ப்ரஹ்மகோஷம், ஆசீர்வாதம், யஜமான ஆச்சார்ய மரியாதை, பொது ஜன சேவை, இரவு 7 மணிக்கு பெருமாள் தாயார் தங்க கருட சேவை, திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.