பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மெலட்டூா் வருவாய் சரகத்துக்கு உள்பட்ட மெலட்டூா், திருக்கருகாவூா் உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மெலட்டூா் வருவாய் சரகத்துக்கு உள்பட்ட மெலட்டூா், திருக்கருகாவூா் உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றாா். பெறப்பட்ட மனுக்கள் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. மேலும் 4 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் (பயிற்சி) விஷ்ணுபிரியா, பாபநாசம் வட்டாட்சியா் பூங்கொடி, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் ரத்தினவேல்,

மெலட்டூா் வருவாய் சரகத்துக்குட்பட்ட வருவாய் அதிகாரி, கிராம நிா்வாக அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com