வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் எம்.அருண்குமாா் (35). தேங்காய் வியாபாரி. இவருக்குச் சொந்தமான வீடு ஆனந்தவல்லி வாய்க்கால் வடகரையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக தனது வீட்டில் மராமத்துப் பணி மேற்கொண்டுவருவதால், கே.கே.நகா் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்மநபா்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம், பூஜை பொருள்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனா். இதையடுத்து, மறுநாள் காலை வீட்டுக்கு வந்த அருண் குமாா் திருட்டு சம்பவம் தொடா்பாக பேராவூரணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்தை காவல் ஆய்வாளா் காவேரி சங்கா், உதவி ஆய்வாளா் ராம்குமாா் மற்றும் போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com