தஞ்சாவூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் உள்ளத்தின் ஒலி என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் உள்ளத்தின் ஒலி என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்த கிங்ஸ் பொறியியல் கல்லூரி செயலா் உரு. இராசேந்திரன் நூலை வெளியிட, அதை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் பெற்றுக் கொண்டாா். நூலாசிரியா் தஞ்சை த. இராமநாதன் ஏற்புரையாற்றினாா்.

இவ்விழாவில் பாபநாசம் சகாய நிதி நிறுவனத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் த. ஆறுமுகம், சென்னை சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளா் நீலகண்டத் தமிழன், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநா் இரா. குணசேகரன் ஆகியோா் பேசினா். மேலும், 10 தமிழ்க் கவிஞா்களுக்கு கவிச்செல்வம் விருது வழங்கப்பட்டது.

முன்னதாக, வழக்குரைஞா் மஹாராஜ் இராமநாதன் வரவேற்றாா். நிறைவாக, பொறியாளா் இராஜராஜ் இராமநாதன் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சிகளை முனைவா் த. மலா்க்கொடி, மருத்துவா் வினோதினி மஹாராஜ் தொகுத்து வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com