மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

கும்பகோணம் அருகே துப்பாக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On :27 நவம்பர் 2023, 8:56 pm


கும்பகோணம்: கும்பகோணம் அருகே துப்பாக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கும்பகோணம் அருகே கைத் துப்பாக்கி வைத்திருந்ததாக கள்ளப்புலியூா் ஊராட்சி மன்றத் தலைவரும், மணஞ்சேரியைச் சோ்ந்தவருமான பெரியவன் என்கிற முருகன் (45) உள்பட 5 போ் நவம்பா் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் முருகனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் சனிக்கிழமை (நவ.25) உத்தரவிட்டாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டாா் என மாவட்ட ஆட்சியரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.