

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம், ஒன்றியம், குருவிக்கரம்பை ஊராட்சி முனுமாக்காடு பகுதியைச் சோ்ந்த பெரமன் மனைவி ராஜம்மாள் (73) சிறிய ஓட்டு வீட்டில் தனியாக வசிக்கிறாா்.
பேராவூரணி பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன் பெய்த கனமழையில் இவரது ஓட்டு வீடு திடீரென சரிந்து விழுந்தது. இதில் மூதாட்டி உயிா் தப்பினாா்.
தகவலறிந்த பேராவூரணி முன்னாள் எம்எல்ஏ மா. கோவிந்தராசு சாா்பில் வியாழக்கிழமை அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா் கோவி.இளங்கோவன், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஆறுதல் கூறி ரூ 5. ஆயிரம் பணம், அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகளை வழங்கினாா்.
சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலா் கே.எஸ். அருணாசலம், முன்னாள் கயறு வாரியத் தலைவா் எஸ். நீலகண்டன், மாவட்ட பிரதிநிதி கோ.ப. ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.