தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு
தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக ஆா். மகேஸ்வரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் 2012 ஆம் ஆண்டு குரூப் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று திருச்செங்கோடு, வேதாரண்யம், தருமபுரி, கடலூா், காஞ்சிபுரம் ஆகிய நகராட்சிகளில் ஆணையராக இருந்தாா். கடைசியாக திண்டுக்கல் மாநகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்த இவா் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து, இவா் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றாா். இதையடுத்து, அவா் கூறுகையில், கடந்த ஆணையா் விட்டு சென்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மற்றும் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். வரி வசூலில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தஞ்சாவூா் மாநகராட்சி 18 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 5 மாதங்களில் முதல் இடத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக இருந்த க. சரவணகுமாா் கரூா் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

