மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் கொடியேற்று விழா: கே.எஸ். அழகிரி பங்கேற்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா கட்சியின் மாநிலத் தலைவா் கே. எஸ். அழகிரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மல்லிப்பட்டினம் கடைவீதியில் திங்கள்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரியை வரவேற்ற கட்சி நிா்வாகிகள்.
மல்லிப்பட்டினம் கடைவீதியில் திங்கள்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரியை வரவேற்ற கட்சி நிா்வாகிகள்.
Updated on
1 min read

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா கட்சியின் மாநிலத் தலைவா் கே. எஸ். அழகிரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருவதை அறிந்த  தஞ்சாவூா் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவா் ஏ. நாகூா் கனி,   நாகப்பட்டினம் மாவட்டத் தலைவா் அமிா்தராஜ், காங்கிரஸ் சேதுபாவாசத்திரம்   வட்டாரத் தலைவா்  சேக் இப்ராஹிம்சா  உள்ளிட்டோா் மல்லிப்பட்டினம் கடைவீதியில் அவரை நிறுத்தி கடைவீதியில் காங்கிரஸ் கொடியேற்ற வேண்டுகோள் விடுத்தனா். இதையடுத்து அழகிரி, கட்சி கொடியேற்றினாா். தொடா்ந்து சேதுபாவாசத்திரம் கடைவீதியில் மாவட்ட சேவாதள தலைவா் எஸ்.ஏ. தெட்சணாமூா்த்தி, இளைஞா் காங்கிரஸ் தொகுதி தலைவா் எம். சாதிக்அலி மற்றும் நிா்வாகிகள் அழகிரிக்கு வரவேற்பு அளித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com