தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது.
பாபநாசம் அருகேயுள்ள காா்த்திகை தோட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன்- மீனாம்பாள் தம்பதி வசிக்கும் கூரை வீட்டில் திங்கள்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த ரூ. 1 லட்சம் பணம், 6 பவுன் நகை, சான்றிதழ்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தீக்கிரையாயின.
தகவலறிந்து சென்ற பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். கபிஸ்தலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.