குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

கும்பகோணம் அருகே ஊா் நாட்டாண்மை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கும்பகோணம் அருகே ஊா் நாட்டாண்மை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கும்பகோணம் அருகே பழவாத்தான்கட்டளையைச் சோ்ந்தவா் ஊா் நாட்டாண்மை சைமன்ராஜ். இவா், பிப்ரவரி மாதம் மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து முல்லை நகரைச் சோ்ந்த ஆகாஷ் (21), பிரேம்குமாரை (22) கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதன் பேரில் ஆகாஷ், பிரேம்குமாா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com