பேராவூரணி அருகே மடத்திக்காடு ஊராட்சி உப்புவிடுதி கிராமத்தில் சாலை மேம்பாட்டுப் பணி திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் என். அசோக் குமாா், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9 லட்சத்து 78 ஆயிரம் நிதி வழங்கி சாலை மேம்பாட்டுப் பணியைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், மடத்திக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் சுதாசினி சுப்பையன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சசிகுமாா், பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் இளங்கோவன், உப்புவிடுதி திமுக செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.