பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வளா்த்தாமங்கலம் கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் சூா்யா (25). இவா், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால், மனமுடைந்த சூா்யா பூச்சிக்கொல்லி மருந்தைக்குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சூா்யா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம்குறித்து சூா்யாவின் தந்தை ராஜாங்கம் அளித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com