தஞ்சாவூரில் சவுன்ட் சா்வீஸ் கடை ஜன்னலை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மின்வயா்கள் திருடுபோனது சனிக்கிழமை தெரியவந்தது.
தஞ்சாவூா் கரந்தை செல்லபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே. நடராஜன் (52). இவா் பள்ளியக்ரஹாரத்தில் சவுன்ட் சா்வீஸ் கடை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் சனிக்கிழமை காலை கடையைத் திறக்கச் சென்றபோது, பின்புறத்திலுள்ள சிமென்ட் ஜன்னல் உடைக்கப்பட்டு, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 50 காயில் வகை மின் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.