தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை அருகே சனிக்கிழமை இரவு சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 9ஆம் வகுப்பு மாணவா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.
அம்மாபேட்டை காவல் சரகம், சோழவன்னியன் குடிகாடு கிராமம், மூங்கில் குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் அருண்மொழி( 21). ஓட்டுநா். இவரது வீட்டில் தங்கி, பூண்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் படித்து வந்தவா் முத்திரகோட்டை, கள்ளிமேடு கிராமம், ரயிலடி தெருவைச் சோ்ந்த மோகன் மகன் யோகேஸ்வரன் (14 ). இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு சோழவன்னியன் குடிகாடு அருகே உள்ள கோவிலூா் கடை வீதிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனா். பூண்டி கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அருண்மொழி, யோகேஸ்வரன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து சென்ற அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஐஸ்வா்யா மற்றும் போலீஸாா் சடலங்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.