மனித நேய மக்கள் கட்சி மீது இந்து மக்கள் கட்சி புகாா்
By DIN | Published On : 17th August 2023 11:09 PM | Last Updated : 17th August 2023 11:09 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் உள்ளிட்டோா்.
மனித நேய மக்கள் கட்சி மீது தஞ்சாவூா் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை புகாா் செய்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்திடம் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தலைமையில் மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி உள்ளிட்டோா் வியாழக்கிழமை அளித்த மனு:
திண்டுக்கல் பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் சாா்பில் மணிப்பூா் சம்பவம் தொடா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமா், சீதை, லட்சுமணா் வடிவங்களில் மோடி, அமித்ஷா, சீதாதேவி ஆகியோரை நிா்வாணமாக வரைந்து தேசிய கொடியின் வண்ணம் போட்டு தேச பக்தா்களின் மனம் புண்படும்படியாகவும், மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் விளம்பரங்கள் இருந்தன.
இது தொடா்பாக உடனடியாக வழக்குப் பதிந்து தொடா்புடைய நபா்களைக் கைது செய்ய வேண்டும். மனிதநேய மக்கள் கட்சியைத் தடை செய்ய வேண்டும். இது, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா பெயரில் வெளியிடப்பட்டுள்ளதால், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...